உங்கள் தொலைபேசி திருடு போய்விட்டதா ? இலங்கை போலீஸ் அறிமுகப்படுத்தும் புதிய முறை
உங்களது கையடக்கத்தொலைபேசி திருடு போய்விட்டால் அல்லது தொலைந்து விட்டால் அவற்றினை முறையிடுவதற்காக இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது உங்களுடைய முறைப்பாடுகளை இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலமாகவே பதிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதற்காக வேண்டி இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய இணையத்தளம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. உங்களுடைய தொலைபேசி பற்றிய முறைப்பாடுகளுக்கு இந்தி இணைய தள முகவரியினை அணுக முடியும்.
இந்த சேவையானது மக்களின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்வதற்காக வேண்டி உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
