கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் யாழ் மாணவி சாதனை
தேசிய மட்டத்தில் இடம்பெற்ற 18 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப்பாய்தல் நிகழ்ச்சியில் யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரியை சேர்ந்த N. டக்க்ஷிதா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இவர் கொழும்பு சுகததாச மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 3.02 மீட்டர் உயரத்தை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் இதே போட்டியில் கலந்து கொண்ட ஹேரினா 2.90 மீட்டர் உயரத்தினை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
ஏனைய விளையாட்டு செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT NEWS
